கடந்த 2017ம் ஆண்டில் இருந்து ரஜினி அரசியலில் களமிறங்கவிருக்கிறார் என்பது பேசு பொருளாக மாறியிருக்கிறது.

ஆனால் இப்போது வரை ரஜினி, கட்சி தொடங்குவது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் அவர் அரசியலுக்கு வருவாரா? என்பதே புரியாத புதிராக இருக்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினி வெளியிட்டது போல ஒரு கடிதம் இணையத்தில் வைரலான நிலையில், அதனை பற்றி விளக்கம் அளித்த ரஜினி, ‘அது நான் எழுதிய கடிதம் இல்லை. அதில் தனக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்ட தகவல் உண்மை தான்’ என தெரிவித்திருந்தார்.

இதனால் அவர் அரசியலில் இருந்து விலகி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினியுடன் ஆடிட்டர் குருமூர்த்தி 2 மணி நேரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

நடிகர் ரஜினி உடல் நலம் பற்றியும், இன்றைய அரசியல் சூழல், அரசியல் செயல்திட்டம் குறித்து விவாதித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே