ரஜினி எதிர்காலத்தில் அதிமுகவுக்குத்தான் ஆதரவு – அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை..!!

ஜனவரியில் புதிய கட்சி தொடங்கவிருப்பதாக அறிவித்திருந்த ரஜினிகாந்த், உடல்நிலை காரணமாக தான் கட்சி தொடங்கப்போவதில்லை என அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

அதாவது, சிறுநீரக அறுவை சிகிச்சையாலும், புதிய வகை கொரோனா பரவி வருவதாலும் அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என்றும் கட்சி ஆரம்பித்து என்னை நம்பி வந்தவர்களை பலிகடா ஆக்க விரும்பாததாலும் இந்த முடிவை தான் எடுத்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும், அரசியலுக்கு வராமலேயே தான் என்ன செய்ய முடியுமோ அதனை செய்வேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அரசியலுக்கு வராமலேயே ரஜினிகாந்த் சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்காவது ஆதரவு கொடுக்கப் போகிறாரா? என்ற கேள்வி வெகுவாக எழுந்துள்ளது. 

அதோடு, பாஜக தான் அவரை கட்சி தொடங்க வற்புறுத்தியதாகவும் பாஜகவுக்கு தான் அவரது ஆதரவு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து அதிமுக மூத்த தலைவர்களுள் ஒருவரான அன்வர் ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

‘ரஜினியின் இந்த முடிவு அவரது உடல்நலத்திற்காக எடுக்கப்பட்டது. எந்த கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வழிகாட்டுவார்.

‘அரசியல் மாற்றம்’ என்று கூறிய ரஜினி தற்போது அரசியலுக்கு வரவில்லை. அவர் தொடர்ந்து அதிமுகவுக்கு ஆதரவாளிப்பார். தனது ரசிகர்களையும் அதிமுகவை ஆதரிக்குமாறு வழிநடத்துவார்’ என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே