நடிகர் ரஜினிகாந்தின் 168 வது படமான அண்ணாத்த திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இப்படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கி வரும் நிலையில் சன் பிக்சர்ஸ் படத்தை தயாரித்துள்ளது.

இதில் நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா ,குஷ்பு , பிரகாஷ் ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர் . டி இமான் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளி போனது. குறிப்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரஜினிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் படப்பிடிப்பு ரத்தானது. 

இருப்பினும் மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என அறிவிக்கப்படாமல் இருக்க மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கியுள்ளது என்ற குட் நியூஸ் தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது.

அதாவது சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அப்போது அவரை தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும் நடிகருமான அருள் சரவணன் சந்தித்துள்ளார்.

காரணம் தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருள் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் கோகுலம் ஸ்டூடியோவில் நடந்து வருகிறதாம்.

அப்போது ரஜினியை அருள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியுள்ளார்.

இதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்த ரஜினி, தேர்தல் வரை வெளியில் தலைகாட்டாமல் இருப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில், அவரோ காஸூவலாக மீண்டும் படப்பிடிப்புக்கு சென்றுவிட்டது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கூடுதல் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே