புதுச்சேரி முதல்வர் – எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பரிசோதனை!

புதுவை சட்டப்பேரவையில் முதல்வர் வே.நாராயணசாமி, பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து ஆகியோருக்கு கரோனா பரிசோதனை இன்று செய்யப்பட்டது.

மேலும், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுச்சேரி கதிர்காமம் தொகுதி சட்டபேரவை உறுப்பினர் என்.எஸ்.ஜே.ஜெயபால் அவர்களுக்கு கடந்த 24 ஆம் தேதி கரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது.

இந்நிலையில் முதல்வர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி பேரவையில் அறிவித்திருந்தார்.

அதன்படி புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் ஒரு பகுதியில் தற்போது முதல்வர் மற்றும் பேரவைத் தலைவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பேரவவைக் கூட்டத்தொடரில் பங்கேற்ற பத்திரிகையாளர்களுக்கும் கரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே