கொரோனாவின் அடுத்த அலையை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர்!!

கொரோனாவின் அடுத்த அலையை தடுக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்த பின் சுகாதாரத்துறை செயலாளர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அதில், தமிழகத்தில் நோய் எண்ணிக்கை அதிகமாகி, தற்போது குறைந்து வரும் நிலையில் நாம் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அடுத்த சில வாரங்களில் கொரோனா தொற்று படிப்படியாக குறையும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ” தமிழ்நாட்டில் நாள்தோறும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்து வருகிறோம். திருச்சியில் பல இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவதை சரியாக பின்பற்றுவதில்லை.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் பத்தாயிரம் படுக்கை வசதிகள் உள்ளன. கொரோனா இறப்பு விகிதத்தை குறைக்க போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறோம். அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது.

அங்கு தேவையான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமித்து வருகிறோம்.கொரோனா தொற்றினால் தமிழ்நாட்டில் தான் அதிக அளவிலான மருத்துவர்கள் உயிரிழக்கிறார்கள் என்கிற ஐ.எம்.ஏ. வின் அறிக்கை அரசின் அறிக்கை இல்லை.

ஐ.சி.எம்.ஆர் அளிக்கும் அறிக்கை தான் அதிகாரப்பூர்வ அறிக்கை. மருத்துவ கழிவுகள் சுகாதாரமான முறையில் அழிப்பதற்கு அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது ” என்று குறிப்பிட்டுள்ளார்.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே