PUBG விளையாட விட மறுத்த தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்.!

கர்நாடக மாநிலம் பெல்காமில் பப்ஜி விளையாட அனுமதி மறுத்த தந்தையை அவரது மகன் துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெல்காமில் உள்ள சித்தேஸ்வர் நகர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சங்கர். தமது மகன் ரகுவீர் செல்போனில் பப்ஜி விளையாடுவதை கண்டித்து உள்ளார்.

மேலும் ரகுவீரின் செல்போனை அவரிடமிருந்து பறித்துக்கொண்ட சங்கர், இணைய தொடர்பை துண்டித்து உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ரகுவீர், தனது தந்தை சங்கரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

பின்னர் வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்களை ஒரு அறையில் வைத்து பூட்டிய ரகுவீர், தந்தை சங்கரை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்த ரகுவீருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே