மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசு ஊரடங்கை அமல்படுத்த் கூடாது என மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் ஊரடங்கு விதிக்கலாம் என கூறியுள்ளது.
எனவே அன்லாக் 4.0 அறிவிப்பில், உள்ளூர் அளவில் ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் மத்திய அரசிடம் கலந்தாலோசிக்காமல் மாநில அரசுகள் தனியாக ஊரடங்கு குறித்த அறிவிப்பை வெளியிட முடியாது.
மேலும், மாநிலங்களுக்குள் செல்லும் மக்களுக்கு இ-பாஸ் நிபந்தனை விதிக்கக்கூடாது. திரையரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள் செப். 30 வரை மூடப்பட்டிருக்கும், வெளிநாட்டு விமான சேவைகளுக்கு தடை நீடிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு தொடரும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.