இன்று முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை அதிகரிப்பு

தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் இன்று முதல் பால் விலையை உயர்த்தியுள்ளன. 

ஆரோக்யா, டோட்லா, ஹெரிட்டேஜ் ஆகிய நிறுவனங்கள்  லிட்டருக்கு 2 ரூபாய் முதல் 4 ரூபாய் வரை விலை உயர்த்துவதாக அறிவித்துள்ளன.

சமன்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 48 ரூபாயில் இருந்து 50 ரூபாயாகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டருக்கு 52 ரூபாயில் இருந்து 56 ரூபாயாகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் லிட்டருக்கு 60 ரூபாயில் இருந்து 62 ரூபாயாகவும் உயர்த்தப்படுவதாகவும், தயிர் லிட்டருக்கு 58 ரூபாய் இருந்து 62 ரூபாயாக உயர்த்தப்படுவதாகவும் அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த விலை உயர்வுக்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மூன்று முறை தனியார் நிறுவனங்கள் பால் விலையை உயர்த்திய நிலையில், இப்போது மீண்டும் விலையை உயர்த்தக்கூடாது என்று அந்த சங்கம் வலியுறுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே