பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் : ஹெச்.ராஜா

மத்திய பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக, பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற ஹெச்.ராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்கள் மீது தமிழகத்தில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுவதாகவும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களுக்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மத்திய பட்ஜெட் என்பது இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்குமான பட்ஜெட் எனவும் இதில் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே