அயோத்தி விவகாரம் தொடர்பாக தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களிடம் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக அயோத்தி விவகாரம் தொடர்பாக தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் நல்லிணக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் அமைச்சர்களிடம் பிரதமர் அறிவுறுத்தி இருப்பதாக தகவல் கூறுகிறது.
அதேபோல உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வெற்றி தோல்வி என்ற கண்ணோட்டத்தில் பார்க்கக் கூடாது என்று பிரதமர் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூற வேண்டாம் என கட்சி நிர்வாகிகளிடமும், செய்தித் தொடர்பாளர்கள் இடமும் பாரதிய ஜனதா மேலிடம் கேட்டுக்கொண்டிருந்தது.
மேலும் எம்.பி.க்கள் தங்களுடைய தொகுதிகளுக்கு சென்று அமைதியை நிலைநிறுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.
அதேபோல தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பும் தங்களுடைய உறுப்பினர்களுக்கு கூறியிருந்தது.
இந்நிலையில், பிரதமர் மோடி அமைச்சரவை கூட்டத்தில் பேசி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17ஆம் தேதி ஓய்வுபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக அயோத்தி நில பிரச்சினை வழக்கு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.