டெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் 74வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் காலை சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றினார். அதற்கு முன்னதாக, சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு அவர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தமது டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெய் ஹிந்த்! என்று பதிவிட்டுள்ளார்.