1000 நாட்கள்…! 6 லட்சம் கிராமங்கள்…! மோடி வெளியிட்ட சுதந்திர தின மெசேஜ்

டெல்லி: 1,000 நாட்களில் 6 லட்சம் கிராமங்கள் கண்ணாடி இழைகள் கேபிள் மூலம் இணைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

நாடு முழுவதும் இன்று 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் செங்கோட்டையில்  பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் பேசியதாவது: சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் நாள் சுதந்திர தினம். நாடு சுதந்திரமடைய உயிரை தந்தவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி.

கொரோனாவிற்கு எதிராக போராடுபவர்களுக்கு நன்றி. நாம் இந்த போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம். நாட்டில் தற்போது இயற்கை சேதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. அதனை சமாளிக்க, மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்துள்ளன.

நாடு தன்னிறைவு பெறுவதே தாரக மந்திரம். உலகை வழி நடத்தக்கூடிய இடத்தில் இந்தியா வர வேண்டும். இந்திய விவசாயிகள் உலகிற்கு எடுத்துக்காட்டாக உள்ளன. நமது விவசாய துறையின் கட்டமைப்பு தரம் உயர்த்த வேண்டி உள்ளது.

உலக பொருளாதாரத்தில் நமது நாட்டின் பங்கு அதிகரிக்கவேண்டும். பல சவால்கள் இருக்கின்றன. இந்திய தயாரிப்புகளுக்கு குரல் கொடுக்க வேண்டியது தான் நமது தாரக மந்திரம். ஒரே நாடு, ஒரே வழி, ஒரே ரேஷன் என  முன்னேறுகிறோம்.

இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும் என்று நான் கூறுகிறேன். விவசாயிகளுக்கு உரிய அதிகாரம் தரப்பட வேண்டும். அவர்களின் செலவுகளை குறைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

நாட்டில் 1.5 லட்சம் கிராமங்கள் கண்ணாடி இழைகள் மூலம் இணைக்கப்பட்டு உள்ளன. பீம் செயலி வழியாக3 லட்சம் கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்று  இருக்கிறது.

வரக்கூடிய 1,000 நாட்களில் 6 லட்சம் கிராமங்கள் கண்ணாடி இழைகள் கேபிள் மூலம் இணைக்கப்படும்.பெண்களின் முன்னுரிமைக்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன என்று பேசினார்.

AKR

Having 20 years experience in the field of Journalism in various positions.

AKR has 46 posts and counting. See all posts by AKR

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே