கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாடு பொருளாதார வளர்ச்சியில் செல்கிறது எனவும், கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை மீட்போம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
சிஐஐ ஆண்டுக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங்கில் பிரதமர் மோடி பேசியதாவது:
* கொரோனா பாதிப்பால் ஆன்லைன் நிகழ்ச்சிகள் புதிய முயற்சியாக உள்ளன
* மக்களை காக்க வேண்டும். அதேநேரத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும்.
* கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம்
* விவசாயம், சுயதொழில் செய்வோர் தொழில்நுட்பத்தால் பொருளாதாரம் மீளும்
* இந்திய தொழில்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது.
* தொழிலதிபர்கள் திறமையால் பொருளாதாரத்தை மீட்டெடுத்து விடலாம்.
* தற்சார்பு இந்தியா தான் நம் முன் உள்ள ஒரே வழி
* பொருளாதாரத்தை வலுப்படுத்துவதை அரசு முதல் நோக்கமாக கொண்டுள்ளது.
* கரீப் கல்யாண் திட்டம் மூலம் 74 கோடி ஏழைக் பயனபெற்றுள்ளனர்
* மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கை உள்ளது
* வளர்ச்சியை மீட்பதே நமது முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்
* கொரோனாஅச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையில்செல்கிறது.
* கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவும் வகையில் திட்டங்கள்வகுக்கப்பட்டுள்ளன.
* ஏழை எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் பெரும் உதவிக்கரமாக உள்ளது
* ஏழை எளிய மக்களுக்கு 53 ஆயிரம் கோடி அளவுக்கு நிவாரண திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
* வைரசை எதிர்த்து போராட நாம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும்
* 74 கோடி பேருக்கு ரேசன் பொருட்கள் விநியோகம்
* விவசாய பொருட்களை மின்னணு வர்த்தகத்தின் மூலமும் விற்பனை செய்யலாம்.
* 8 கோடி பேருக்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
* தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தம் செய்து முதலீடு அதிகரிக்கப்படும்
* அரசு எடுத்து வரும் நடவடிக்கையால், நிலக்கரி, எரிசக்தி, ஆராய்ச்சி மற்றும்தொழில்நுட்பத்துறை என அனைத்து துறைகளிலும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உள்ளன.
*கொரோனாவுக்கு எதிராக பொருளாதாரத்தை வலுப்படுத்த அரசு முன்னுரிமை அளித்துள்ளது. இதற்காக அரசு உடனடியாக முடிவெடுத்தது.
நாட்டிற்கு நீண்ட காலம் பயனளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவ்வாறு பிரதமர் பேசினார்.