தமிழகத்தில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே பெட்ரோல், டீசல் விற்க கட்டுப்பாடு தேவை என்று தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி முதல்வர் பழனிசாமிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவசியமின்றி இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் நிரப்புவதை தடுப்பதற்கு நேரக் கட்டுப்பாடு உதவும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் அரசு வலியுறுத்திய பால், காய்கறி போன்ற அத்தியாவசிய வாகனங்களுக்கு மட்டும் 24 மணி நேர சேவை செய்யப்படும் என்று பெட்ரோலியம் விற்பனையாளர்கள் சங்க தலைவர் முரளி, முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன.
மேலும் ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.