டெல்லி தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார் பி.சி.சாக்கோ

டெல்லி சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து பொறுப்பாளர் பதவியை பி.சி சாக்கோ ராஜினாமா செய்துள்ளார்.

நேற்று டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.

இதில் ஆளும் ஆம் ஆத்மி 62 இடங்களின் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைகின்றது.

மும்முனை போட்டியாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் பாஜக 8 இடங்களை கைப்பற்றியது.

காங்கிரஸ் கட்சி போட்டியிட 62 தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படு தோல்வி அடைந்தது.

இந்நிலையில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் பி.சி சாக்கோ தனது பொறுப்பை ராஜினாமா செய்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே