பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்ஷர்ஷிப்புக்கான ஏலத்தை எடுக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2018-ம் ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சராக இணைந்த விவோ நிறுவனம் 2022 வரை ஒப்பந்தம் செய்திருந்தது.
ஆனால் லாடக் எல்லை பிரச்சினை தொடர்பாக இந்தியாவில் சீன பொருட்களுக்கு பெரும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்து விவோ நிறுவனம் தனது டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.
இந்நிலையில் வரும் செப்டம்பர் 19-ந் தேதி முதல் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இந்த தொடருக்கான டைட்டில் ஸ்பான்சர் இடம் காலியாக உள்ளது.
தற்போது காலியாக உள்ள ஐபிஎல் 2020 ஸ்பான்சர் உரிமத்தை வாங்க சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ஐபிஎல் ஸ்பான்சர் தொடர்பாக நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.
இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.