தமிழகத்தில் தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,000 நிவாரணம் – முதல்வர் பழனிசாமி

தீப்பெட்டி தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க, சிறப்பு நிவாரண உதவி வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும், ஆயிரத்து 778 தீப்பெட்டி ஆலைகளில், ESI திட்டத்தின் கீழ் பதிவு செய்த, 21 ஆயிரத்து 770 தொழிலாளர்களுக்கு, தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், என கூறியுள்ளார். 

இதற்காக அரசு 2 ஆயிரத்து 177 கோடி ஓதுக்கீடு செய்துள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே