உத்தரப்பிரதேசத்தில் தொழிலதிபர் ஒருவர் ஒரு ரூபாய்க்கு ஆக்சிஜன் சிலிண்டர் நிரப்பிக் கொடுத்து வருவது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்கும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கள்ளச்சந்தையில் ஒரு ஆக்சிஜன் சிலிண்டர் 30ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், உத்தரபிரதேசத்தில், ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலை நடத்தி வரும் மனோஜ் குப்தா என்ற தொழிலதிபர் நாள்தோறும் ஆயிரம் பேருக்கு ஒரு ரூபாய் என்ற விலையில் ஆக்சிஜன் சிலிண்டரை நிரப்பிக் கொடுத்து உதவி வருகிறார்.

கடந்த ஆண்டு தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது ஆக்சிஜன் உதவி தேவைப்பட்டதாகவும், அதனை மனதில் வைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்துவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே