திமுக நடத்தும் பொதுக்கூட்டத்தில் ஒவைசி பங்கேற்கவில்லை..!!

ஜனவரி 6 இல் திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு நடத்தும் பொதுக்கூட்டத்தில் ஓவைசி பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘இதயங்களை இணைப்போம்’ என்ற பெயரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜனவரி 6-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் திமுக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் ஏஐஎம்ஐஎம் கட்சியின் நிறுவனரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஓவைசி பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

ஓவைசியின் கட்சியானது பீகார் சட்டப்பேரவை தேர்தலில் 5 இடங்களில் வெற்றிபெற்றது. அதே சமயம் ஓவைசி சமீபத்தில் திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாக கூறியிருந்தார்.

இதனால் அவர் திமுக மாநாட்டில் பங்கேற்று கூட்டணியை உறுதிப்படுத்துவார் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான கூட்டம் தொடர்பாக திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு செயலாளர் மஸ்தான் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ஜனவரி 6 இல் திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு நடத்தும் பொதுக்கூட்டத்தில் ஓவைசி பங்கேற்கவில்லை .

ராயப்பேட்டை பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திமுகவின் தோழமைக் கட்சிகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே