திமுகவை எதிர்த்தே எங்கள் பிரச்சாரம் – டிடிவி டிடிவி தினகரன்..!!

அமமுகவும் தேமுதிகவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

மேலும், அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாதுல் முஸ்லிமின் கட்சி, எஸ்டிபிஐ கட்சியும் அமமுக கூட்டணியில் உள்ளது.

இந்த கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் பொன் ராஜாவை ஆதரித்து டிடிவி தினகரன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது, அமமுக மற்றும் தேமுதிக கூட்டணி வெற்றிக் கூட்டணி. எங்களை கைநீட்டி யாரும் குற்றம் சொல்லமுடியாது.

மற்ற கூட்டணி பண மூட்டையுடன் நிற்கிறது. பணத்தால் வாக்குகளை வாங்கிவிடலாம் என தவறான எடைபோடுகின்றனர். அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்தால் மாவட்ட செயலாளர் தான் காவல் ஆய்வாளராக இருப்பார்கள். திமுக தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தால் எல்லாருமே ஆந்திராவிற்கு செல்ல வேண்டியதுதான் என டிடிவி தினகரன் விமர்சித்தார்.

மேலும், திமுகவை எதிர்த்தே எங்கள் பிரச்சாரம் இருக்கும் என கூறினார். மற்ற கட்சிகளை போல் மாதம் தோறும் பணம் கொடுப்பதாக கூறி மக்களை ஏமாற்ற மாட்டேன்.

ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே