தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை வார சந்தைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒன்று கூடலை தவிர்க்கும் நோக்கத்தில் அனைத்து வாரச்சந்தைகளையும் வரும் 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு.
சிறிய கடைகள், அங்காடிகளுக்கு இதுவரை தடையேதுமில்லை.
பெரிய அளவிலான வாரச்சந்தைகளுக்குத்தான் 31-ஆம் தேதி வரை மூடுமாறு உத்தரவு வந்திருக்கிறது.
பெரிய நகைக்கடைகள், பெரிய ஜவுளிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் நாளை முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.