தமிழகத்தில் உள்ள அனைத்து வாரச்சந்தைகளையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு

தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை வார சந்தைகளை மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒன்று கூடலை தவிர்க்கும் நோக்கத்தில் அனைத்து வாரச்சந்தைகளையும் வரும் 31-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்பது தமிழக அரசின் உத்தரவு.

சிறிய கடைகள், அங்காடிகளுக்கு இதுவரை தடையேதுமில்லை.

பெரிய அளவிலான வாரச்சந்தைகளுக்குத்தான் 31-ஆம் தேதி வரை மூடுமாறு உத்தரவு வந்திருக்கிறது.

பெரிய நகைக்கடைகள், பெரிய ஜவுளிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் நாளை முதல் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே