உணவகங்களில் குளிர்சாதன வசதியை பயன்படுத்த அனுமதியளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உணவகங்களில் ஏசி வசதியை பயன்படுத்தி கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுளை மாநில மற்றும் மத்திய அரசு கடந்த சில மாதங்களாக விதித்து வந்தது.

இந்நிலையில் நிபந்தனைகளுடன் கூடிய தளர்வுளை அறிவித்தது.

இருப்பினும் உணவகங்களில் ஏசி பயன்படுத்தி கொள்ள அனுமதி தராமல் இருந்து வந்தது தமிழக அரசு.

இந்நிலையில் இன்று (5 ம் தேதி) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகளின் படி உணவகங்களில் ஏசி வசதியை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து காலை 6 முதல் இரவு 8 மணி வரை ஓட்டல்களில் ஏசியை பயன்படுத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி பார்சல் வழங்கவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே