அதிமுக அலுவலகத்துக்கு ஓபிஎஸ், செம்மலை வருகை..!!

அதிமுக செயற்குழு நடைபெற இருக்கும் நிலையில், தலைமை அலுவலகத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் , செம்மலை வந்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற்றது.

இதன் பின் அதிமுக செயற்குழுக் கூட்டம் வருகின்ற 28-ஆம் தேதி திங்கள்கிழமை காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை செயலகத்தில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலயில் வரும் 28-ஆம் தேதி அதிமுக செயற்குழு நடைபெற இருக்கும் நிலையில், தலைமை அலுவலகத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் , செம்மலை வந்துள்ளனர். 

செயற்குழு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தலைமை அலுவலகத்திற்கு இருவரும் வந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே