ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கின்றன! – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!

ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி, குழந்தைகளையும் சீரழிக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடைகோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் விசாரணை இன்று நீதிபதிகள் அமர்வில் வந்த நிலையில், விராட் கோலி, தமன்னாவை எதிர்மனுதாரராக சேர்க்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி, குழந்தைகளையும் சீரழிக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்து, இந்த வழக்கில் விசாரணையை 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

One thought on “ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்களை மட்டுமின்றி குழந்தைகளையும் சீரழிக்கின்றன! – சென்னை உயர்நீதிமன்றம் வேதனை!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே