கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் நலமுடன் இருக்கிறார் : அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் ஒருவர் மட்டுமே கொரானா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரும் மருத்துவர்களின் முயற்சியால் நலமுடன் இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்களுக்கான குடியிருப்பு கட்டிடத்தை திறந்து வைத்த அவர், கொரானா வைரஸ் தொடர்பாக 1,132 பேர் தமிழக அரசின் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே