IPL போட்டிகளை நடத்த மத்திய அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வ அனுமதி – IPL தலைவர் பிரிஜேஷ் பட்டேல்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த மத்திய அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைத்துள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டது.

வெளிநாடுகளில் கிரிக்கெட் தொடரை நடத்த மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகங்களின் அனுமதி தேவை.

இதில் விளையாட்டுத் துறை அமைச்சகத்திடமிருந்து ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுவிட்டது.

இந்த நிலையில், மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களிடமிருந்து அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைத்துள்ளதாக பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே