அயர்லாந்தில் தனது பெட்டியை தொலைத்துவிட்டு முழித்துக்கொண்டிருந்த இசாந்த் சர்மா!! 13 வருடம் கழித்து வெளியான தகவல்

இஷாந்த் சர்மா தனது 17 வயதில் இருந்து இந்திய அணிக்காக ஆடி வருகிறார். தற்போது தனது 17 வயதில் அயர்லாந்தில் நடந்த விசித்திரமான சம்பவம் பற்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேரலையில் அவர் கூறியதாவது…

இங்கிலாந்தில் நடைபெற்ற தொடருக்கு நான் 17 வயதில் தேர்வாகி இருந்தேன். அயர்லாந்து விமான நிலையத்திற்குச் சென்ற பின்னர் எனது மேலாளரை தொடர்பு கொண்டு என்னுடன் வந்த பெட்டிகளை என்னிடம் கொண்டுவந்து சேர்க்குமாறு கேட்டேன். அவர் உங்களது பேட்டிங் நேரடியாக உங்கள் அறைக்கே வந்து விடும் என்று கூறினார்.

ஆனால் விமானத்தில் பயணிகளுடன் அதி பெட்டிகள் என்னை மாதிரியே வந்திருந்ததால் எனது பெட்டியை தவற விட்டுவிட்டார்கள். எனது பெட்டி வரவில்லை. பயிற்சிக் களத்தில் எல்லோரும் பயிற்சி செய்து கொண்டிருந்தனர். ஆனால் நானோ ஒரு ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் பின்னர் ராகுல் டிராவிட் தான் எனக்கு உதவினார் என்று கூறியுள்ளார் இசாந்த் சர்மா.

Related Tags :

ishant sharma | RahulDravid

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே