உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர், கம்பியூட்டர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தகுதியானவர்கள் இன்று முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை http://www.tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 19 முதல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரி 29-ம் தேதி கணினி வழித் தேர்வு நடைபெறவுள்ளது.

மேலும், இதுதொடர்பான விவரங்களுக்கு http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே