வடகிழக்கு பருவமழை வரும் 17 ல் தொடக்கம் : வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்கு பருவமழை வரும் 17ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு பருவமழை வடக்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் இருந்து படிப்படியாக விலகி வருவதாக குறிப்பிட்டார்.

இதேபோல் வடகிழக்கு பருவ மழை வரும் 17ம் தேதி துவங்க வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்ட அவர் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் வெப்பச் சலனம் காரணமாக மழை பெய்து உள்ளதாக தெரிவித்தார்.

அதிகபட்சமாக கோபிசெட்டிபாளையத்தில் 13 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டார்.

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே