பள்ளி, கல்லூரிகள் திறப்பது எப்போது என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காணரமாக கடந்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
தற்போது 7ம்கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.இதனிடையே பல்வேறு தளர்வுகள் மத்திய, மாநில அரசால் வழங்கப்பட்டுள்ளன.
ஊரடங்கு நடவடிக்கையால், கல்விநிலையங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலமாக பாடங்கள்எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், நாடு முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 4ஆம்கட்ட ஊரடங்கு அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில் பல்வேறு தளர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கருதப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் திறப்பது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பள்ளி,கல்லூரிகளை திறப்பது குறித்து இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.