நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை.
பொதுமக்கள் மட்டும் இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட முன்கள பணியாளர்களும் அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றால், எம்.எல்.ஏக்கள், எம்.பி-க்கள் என பலர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதிக்கு கடந்த 20ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட அவர் கடந்த 19ம் தேதி சென்னை திரும்பினர். அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது.
இதனால் பாரதிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர் எஸ் பாரதி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
அவர் தற்போது குணமடைந்து வீடு திரும்பி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.