வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை மண்டலாமாக உருவெடுத்துள்ளதால், புயல் உருவாகும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் கடலோர பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த புயல் தற்போது புதுச்சேரிக்கு 370 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 420 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.
இந்த புயலை எதிர்கொள்ள தமிழகத்தில் 12 குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு குழுவின் இயக்குனர் ஜெனரல் கூறியுள்ளார்.
இதேபோன்று, புதுச்சேரியில் 2 குழுக்கள், காரைக்காலில் 1 குழு தயாராக உள்ளன. நெல்லூரில் 3 குழுக்கள், சித்தூரில் 1 குழு மற்றும் விசாகப்பட்டினத்தில் 3 குழுக்கள் என ஆந்திர பிரதேசத்தில் 7 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன.