தம்மை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள விக்கிபீடியா போன்றே நித்தியானந்தா பீடியா ஒன்றை உருவாக்கி உள்ளதாக அறிவித்துள்ளார் நித்தியானந்தா.
பாலியல் விவகாரம், ஆள் கடத்தல், கொலை என அடுக்கடுக்கான வழக்குகளில் தேடப்படும் நபராக அறியப்படுபவர் சுவாமி நித்தியானந்தா. அவரை போலீசார் இன்னமும் தேடிக் கொண்டிருக்க 2018ம் ஆண்டில் சீடர்களுடன் இந்தியாவில் இருந்து தப்பிச் சென்றார்.
ஈக்வடார் என்றும் நாட்டில் தனி தீவில் கைலாசா என்ற பெயரில் இந்துகளுக்கான தனி நாட்டினை அமைத்துள்ளதாக அறிவித்து கொண்டார். கைலாசா நாடு பற்றிய முக்கிய அறிவிப்பு, வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட போவதாகவும் அவர் கூறி உள்ளார்.
வாடிகன் வங்கியை மையமாக கொண்டு ரிசர்வ் பேங்க் ஆப் கைலாசா, அதற்கென தனி கரன்சி நோட்டுகளும் இருப்பதாகவும் நித்தியானந்தா தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் வழக்கமாக உரையாற்றி வரும் தமது யூ ட்யூப் சேனலில் பேசிய நித்தியானந்தா, விக்கி பீடியா போல பலரும் தம்மை பற்றி அறிய நித்தியானந்தாபீடியா என்ற பக்கத்தை உருவாக்கி உள்ளதாக கூறி உள்ளார்.
தொடர்ந்து தமது உரையில் அவர் கூறியிருப்பதாவது: தன்னை பற்றிய புது விவரங்கள் அதில் பதிவு செய்யப்படும். தன்னை ஆண்டி என்றாலும் ஓகே, அதிபர் என்றாலும் ஓகே தான் என்றும் பேசி சிரிப்பை வரவழைத்து இருக்கிறார்.