நிர்பயா வழக்கு : மத்திய அரசு மனு மீது பிப்.11 விசாரணை

நிர்பயா கைதிகளை தனித்தனி நாட்களில் தூக்கிலிட அனுமதி கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 11 ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

இந்த 4 கைதிகளும் தங்களுக்கான சட்ட நிவாரணங்களை தேடிக்கொள்ள டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த புதன் அன்று 7 நாட்கள் கெடு விதித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு, இந்த கெடு வரும் 11 ஆம் தேதி முடிவடைவதால் அன்று பிற்பகல் 2 மணிக்கு மத்திய அரசின் மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.

கடந்த ஒன்றாம் தேதி தூக்கில் ஏற்ற கறுப்பு வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு எதிராக மத்திய அரசு, திகார்சிறை நிர்வாகம் மற்றும் நிர்பயாவின் பெற்றோர் மனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே