நிரவ் மோடியின் சகோதரர் மீது வைர மோசடி குற்றச்சாட்டு..!!

வைர வியாபாரி நீரவ் மோடி, வங்கி மோசடி செய்து லண்டனுக்கு தப்பிச் சென்று அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சகோதரன் நேஹல் மோடி, சுமார் 19 கோடி ரூபாய்க்கு அமெரிக்காவில் வைர மோசடி செய்ததாக நியூயார்க் உச்சநீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவாகி உள்ளது.

மன்ஹாட்டனில் உள்ள உலகின் மிகப்பெரிய வைர வியாபார நிறுவனத்திடம் அவர் இந்த மோசடியை நடத்தியதாக அரசு வழக்கறிஞர் சி வான்ஸ் தெரிவித்துள்ளார்.

குற்றப்பத்திரிகையின் படி, நோபல் டைட்டன் ஹோர்டிங்ஸ் என்ற நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினரான நேஹல் மோடி, கடந்த 2015ல் போலியான கடிதம் வாயிலாக LLD Diamonds USA என்ற நிறுவனத்திடம் இருந்து இந்த வைரங்களை வாங்கியுள்ளார்.

அதன்பிறகு அவற்றை விற்று சொந்த செலவுக்கு பயன்படுத்தினார் என்பது குற்றச்சாட்டு.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே