நீலகிரி மலை ரயில் சேவை வரும் 31 ஆம் தேதி முதல் தொடங்கப்படும் – மத்திய ரயில்வே துறை தகவல்..!!

கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த உதகை மலை ரயில் சேவை, வரும் 31 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வரும் 31 ஆம் தேதி முதல் மலை ரயில், சிறப்பு ரயிலாக இயக்கப்பட உள்ளது.

முக கவசம் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பயணிகள் கடைபிடிக்க வேண்டும் என்றும், முன்பதிவு செய்த பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்திற்கு முன்பு வசூலிக்கப்பட்ட கட்டணமே பெறப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே