இந்தியாவிலும் பரவியது புதியவகை கொரோனா!

இங்கிலாந்தில் இருந்து வந்த 6 பேருக்கு புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; 3 பேர் பெங்களூரை சேர்ந்தவர்கள், 2 பேர் ஹைதராபாத், ஒருவர் புனேவை சேர்ந்தவர் என தகவல்!

பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பியவர்களில் 6 பேருக்கு உருமாறிய அதிதீவிர கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

உருமாறிய அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்ட ஆறு பேரும் தனித்தனி அறைகளில் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

அதிதீவிர கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட ஆறு பேருடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பிரிட்டனில் தன்னைத்தானே தகவமைத்துக் கொண்ட அதிதீவிர கரோனா கண்டறியப்பட்டதையடுத்து, பிரிட்டனிலிருந்து நவம்பர் 25-ம் தேதி முதல் டிசம்பர் 23 வரை இந்தியா திரும்பிய 33 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 114 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், 6 பேருக்கு அதிதீவிர கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே