தெலுங்கு நடிகரும், சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா தொற்று ஏற்படும் போது அதனை வெளியே தெரிவித்து தொடர்பில் இருந்தவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக முக்கியமான விஷயம். ஆனால் பலரும் அதனை செய்வதில்லை.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் ராம் சரண் தனக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் ஏதுமில்லை. வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன்.

விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன். என்னுடன் கடந்த சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே