கொரோனாவை கண்டுபிடிக்க புதிய கருவி

புனேவை சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனாவை கண்டறியும் புதிய உபகரணத்தை பயன்படுத்த மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. 

கொரோனா வைரஸ் ஒருவருக்கு பரவியுள்ளதா? என்பதை உறுதி செய்யவே இப்போதுள்ள வசதியின்படி ஒருசில நாட்கள் ஆகின்றது.

எனவேதான் கொரோனா வைரஸ் பரவியுள்ளதா? என்பதை கண்டுபிடிக்கும் வரை சந்தேகம் உள்ளவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் சோதனைக் கருவி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புனேவைச் சேர்ந்த மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கி உள்ள இந்த கருவியின் மூலம் ஒரு வாரத்திற்குள் 1.5 லட்சம் சோதனைகள் வரை மேற்கொள்ள முடியும் என தெரிகிறது.

இந்த கருவியின் விலை ரூ.80 ஆயிரம் மட்டுமே.

இந்த கருவியின் மூலம் உடனுக்குடன் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து தனிமைப்படுத்திவிட்டால் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவுவதை தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

ஒரு கருவியில் 100 பேரை சோதிக்க முடியும் என்றும் இந்த உபகரணத்தை கண்டுபிடித்த தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே