கலைஞர் இல்லத்தில் கண் கலங்கிய மு.க.ஸ்டாலின்..!!

முதல்வராகப் பதவியேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் இருந்து கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்றார்.

அங்கு கலைஞர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஆனந்தத்தில் கண்கலங்கினார்.

மேலும் அவரது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். அவரது சகோதரி மு.க.செல்வியும் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதன்பின்னர் முதல்வர் ஸ்டாலின், சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தவிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே