10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி..!!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த இறுதி முடிவை முதல்வர் அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ரூ.2.80 கோடி மதிப்பிலான வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் திறப்பு விழா, ரூ.6 லட்சம் மதிப்பிலான வ.உ.சி. பூங்கா புதுப்பித்தல் பணிகள், சக்தி மசாலா அறக்கட்டளையின் சார்பில் கொங்காலம்மன் கோயிலில் கட்டப்பட்டுள்ள அன்னதான கூடம் திறப்பு விழா மற்றும் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் 4 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் பசுமைக் கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகிய நிகழ்ச்சிகளில் இன்று நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருவதாகவும், இறுதி முடிவை முதல்வர் தான் அறிவிப்பார் என்றார்.

திமுக ஆட்சியில் ஊராட்சி மன்றங்களில் நூலகங்கள் திறக்கப்பட்டன.

தற்போது 8 ஆயிரம் நூலங்கள் செயல்படுவதாகவும், அரசு பதவியேற்றவுடன் அதிக நூலகங்கள் திறக்கப்பட்டு, போட்டித்தேர்வுகளுக்கு தேவையான 8000 புத்தகங்கள் அடங்கிய நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை.

இதுகுறித்து வல்லுநர்களுடன் கல்வித்துறை ஆலோசித்து முதல்வர் இறுதி முடிவு எடுப்பார் என்றார். தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த நிலை தொடரும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.வி.ராமலிங்கம், கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே