அமைச்சர் துரைக்கண்ணு உடல்நிலை கவலைக்கிடம்..; மருத்துவமனைக்கு அமைச்சர்கள் வருகை..!!

அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடமாக இருக்கும் நிலையில், அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் சென்று உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

தமிழக வேளாண்த் துறை அமைச்சரான துரைக்கண்ணுவிற்கு கடந்த 13 ஆம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானது. இதனைதொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துரைக்கண்ணுவிற்கு எக்மோ மற்றும் செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில், சிகிச்சை பெற்றுவரும் அமைச்சர் துரைக்கண்ணுவை சென்னை காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் சி.வி.சண்முகம், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் சென்று, அவரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே