கோயம்பேடு வழியாக சென்‌னை சென்ட்ரல் – பரங்கிமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று தொடக்கம்

சென்னை பரங்கிமலை – சென்ட்ரல் இடையே மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது.

சென்னையில் 5 மாதத்திற்கு பிறகு கடந்த 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில்கள் மீண்டும் இயங்கத் தொடங்கின.

விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கின.

பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்க ஸ்மார்ட் கார்டு மற்றும் கியூ ஆர் கோடு மூலம் டிக்கெட் எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய காற்று செல்லும் பாதைகள் புற ஊதாக் கதிர்கள் மூலம் கிருமிகள் அழிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை பரங்கிமலை – சென்ட்ரல் இடையே மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியுள்ளது. 

ஆனால் சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் வழித்தடத்தில் தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் வரை செல்லலாம்.

ஏற்கனவே விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ சேவை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே