சுய இன்பமே நல்லது… கூச்சப்படாமல் கூறிய ஓவியா!

பிரபல தொகைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றவர் நடிகை ஓவியா.

இவர் தன்னுடைய குணத்தாலும் மற்றும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது உற்சாகமாகவும், நடனமாடியும் சிரித்தபடி இருப்பது மக்களை வெகுவாக கவர்ந்தது.

இதனால் ஓவியா ஆர்மியை உருவாக்கும் அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

பிக்பாஸ் மூலம் அதிக புகழ் அடைந்தவர் என்றால் அது ஓவியாதான். டைட்டிலில் வெற்றி பெற்ற ஆரவ்வைக் கூட மறந்துவிட்டார்கள். ரசிகர்கள் ஓவியாவை தங்கள் வீட்டில் ஒருவராகவே பார்க்கிறார்கள்.

இதனால் ஓவியாவுக்கு மார்க்கெட் கூடுகிறது. பட வாய்ப்புகளும் விளம்பர வாய்ப்புகளும் குவிகின்றன. 

ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு பிறகு 90ml என்ற சர்ச்சையான படத்தில் நடித்து நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றார்.

ஆனால், அதையெல்லாம் இக்னோர் செய்துவிட்டு தான் உண்டு தன் வேலை உண்டு என கேரியரில் கவனத்தை செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து வரும் ஓவியா அடிக்கடி தனது ரசிகர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துக்கொண்டிருந்த நேரத்தில், ரசிகர் ஒருவர் இப்போதுதான் தான் சுய இன்பம் செய்து முடித்தேன் என்று வெட்கமே இல்லாமல் கூறினார்.

அதற்கு ஓவியாவும் “அது நல்லது” என்று கூலாக ரிப்ளை செய்தார்.

இதையடுத்து மற்றொரு நபர் “பெண்களின் வாழ்க்கையை கெடுப்பதைவிட சுய இன்பம் மிகவும் நல்லது” அப்படித்தானா மேடம் என ஓவியாவை கேட்க, அதற்கு ஓவியாவும், ஆம் சரிதான் என்று பதில் அளித்துள்ளார்.

மேலும், இன்னொரு ரசிகர், ” அடுத்து படம் ஏதேனும் ரிலீஸ் ஆகுமா அல்லது கல்யாணமா? என கேட்டதற்கு, எனக்கு கணவர் தேவை கிடையாது. கல்யாணம் லிஸ்ட்லே கிடையாது என கூறி பதிலளித்தார் ஓவியா.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே