வில்லன், சாமிபுள்ள என சில படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை அஷ்மிதா. இதில் இவர் நாயகியாக நடித்த படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை.
அதனால் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படத்தில் “மஸ்காரா போட்டு மயக்குறியே” என்ற பாடலில் குத்தாட்ட நடிகையாக அதிரடி ஆட்டம் போட்டார். அந்த பாடல் சூப்பர் ஹிட்டானதால் அஷ்மிதாவின் குத்தாட்டத்துக்கு மார்க்கெட் எகிறியது.
அதையடுத்து இரண்டு தெலுங்கு படங்களில் சூப்பர் ஆட்டம் போட்டு விட்டு வந்திருக்கும் அஷ்மிதா, தற்போது “பெட்டிக்கடை” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த பாடத்தில் மஸ்காரா பாடலை விடவும் சூடான் மூவ்மெண்டுகளை கொடுத்து ஆடி வரும் அஷ்மிதா, இதன்பிறகு பாலிவுட்டிலும் முழுக்க மிகப்பெரிய குத்துப்பாட்டு நடிகையாக வேண்டும் என்றும் தீவிர முயற்சி எடுத்து வந்தார்.
இந்நிலையில், தமிழில் கையேந்திபவன் என்ற படத்தில் ஹீரோயின் வாய்ப்பே கிடைத்தது அம்மணிக்கு. இந்த படத்தில் இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளாராம் அஸ்மிதா.
கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இந்த படம் வெளியாகும் என கூறப்படுகின்றது.