சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மாளவிகா மோகனன் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு விஷயத்தை ஷேர் செய்துள்ளார், இதை படித்த பலருக்கும் ஷாக் தான்.
அவர் கூறியுள்ளதாவது, என்னுடைய 14 வயதில் நான் நிறவெறிக்கு ஆளானேன், ஒரு மகாராஷ்டிரா பெண்மணி தன் மகனிடம் நீ நிறைய டீ குடிக்காதே. அப்படி குடித்தால் இவளை போல் கருப்பாக ஆகிவிடுவாய் என என்னை சுட்டிக்காட்டி காட்டினார். அப்போது, நான் மிகவும் மனம் வேதனை அடைந்தேன். அந்த வலி மிகவும் கொடுமையாக இருந்தது.
நீங்கள் எவ்வளவு குணமானவர் என்பது தான் உங்களது தகுதியே தவிர, வண்ணம் அல்ல என்று கூறியுள்ளார். இதற்கு ரசிகர்களிடம் பெரும் ஆறுதல் மற்றும் ஆதரவும் மாளவிகாவிற்கு கிடைத்து வருகிறது.