தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் உள்ள தாலுக்கா நீதிமன்றங்களை இன்று முதல் திறக்க அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள தர்மபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், கரூர் மற்றும் சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களை ஜூன் 1ஆம் தேதி முதல் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்தது.
இதையடுத்து இந்த மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களையும் திறக்கும்படி மாவட்ட முதன்மை நீதிபதிகள், உயர் நீதிமன்றத்துக்கு கோரிக்கை அனுப்பியிருந்தனர்.
இதனை பரிசீலித்த உயர் நீதிமன்ற நிர்வாகக் குழு, ஒன்பது மாவட்டங்களிலும் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று முதல் ஒன்பது மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறப்பதற்கு தேவையான நடைமுறைகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.