ஆந்திராவை போல் தமிழகமும் சட்டம் இயற்ற வேண்டும் : ராமதாஸ்

பாலியல் வழக்கில் ஆந்திராவை போன்று தமிழகத்திலும் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், ஆந்திராவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு 21 நாட்களில் தண்டனை வழங்கப்படும் என சட்டம் இயற்றப்பட்டுள்ளதை பாராட்டினார்.

தமிழகத்திலும் இதுபோன்று சட்டத்தை இயற்ற வலியுறுத்திய அவர், பெண்களுக்கான குற்றவியல் சிறப்பு நீதிமன்றங்களை அனைத்து மாவட்டங்களில் உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே