கரும்பு தோட்டத்தில் சுற்றித்திறிந்த சிறுத்தைக் குட்டிகள்

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் இருந்த இரண்டு சிறுத்தை குட்டிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

தொட்டமுதுகரை என்ற கிராமத்தில் தங்கராஜ் என்ற விவசாயியின் கரும்பு தோட்டத்தில் கடந்த 5 நாட்களாக கரும்பு வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.

அங்கு விலங்குகளின் சத்தம் கேட்டு தொழிலாளர்கள் தேடியபோது, கரும்பு சோகைகளிடையே இரண்டு சிறுத்தை குட்டிகள் இருப்பது தெரியவந்தது.

வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தைகுட்டிகளை பத்திரமாக மீட்டு சென்றனர்.

வனபகுதியில் இருந்து வந்த சிறுத்தை கரும்பு தோட்டத்தில் குட்டிகளை ஈன்றெடுக்க கூடுமென்றும்; மீட்கப்பட்ட குட்டிகள் பிறந்து 20 நாட்கள் ஆகி இருக்கக் கூடும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே