மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வாலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டும் வரும் கடந்த கடந்த 2-ம் தேதி மத்திய அமைச்சர்கள் அமித்ஷா , தர்மேந்திர பிரதான்ஆகியோர் தொற்று பாதிப்பிற்குள்ளாகினர்.
கடந்த 8-ம் தேதி மத்திய விவசாய அமைச்சர் கைலாஷ் சவுத்ரிக்கும்,கடந்த ஆக.12-ம் தேதி மத்திய ஆயுஷ்த்துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக்கிற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் உடல் பரிசோதனை செய்து கொண்டதில், கொரோனா அறிகுறி உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக டுவிட்டரில் லாவ் அகர்வால் கூறியது, கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டதால் டாக்டர்கள் அறிவுரைபடி என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன்.
தன்னுடன் தொடர்பிலிருந்தவர்கள் உடல் பரிசோதனை செய்து கொண்டு, தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.